Tuesday, February 1, 2011

நடி‌கையை ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்த ஜோதிடர்

கோவையை சேர்ந்த ஜோதிடர் ஒருவர், ஒரு நடிகையை ஆபாசமாக படம் எடுத்ததுடன், பணத்தையும் வாங்கி மோசடி செய்துள்ளார். இதுபற்றி சம்பந்தப்பட்ட நடிகை ‌போலீசில் புகார் செய்துள்ளார். காதல் வலி, ஆப்பக்காரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை லலிதா. இவர் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

நான் என்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்கு வசிய ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனிடம் யோசனை கேட்டேன். அவர் நேரில் வரும்படி கூறினார். நான் அவரை நம்பி கோவை வந்தேன். பலமுறை அவரை சந்தித்தேன். அவர் சந்திக்கும் போதெல்லாம் ஆபாசமாக பாலுணர்வை தூண்டும் விதமாக என்னிடம் பேசினார். என்னை மயக்கி அவர் தரும் மெல்லிய துணியினை கவர்ச்சி உடைகளை அணிய சொன்னார். இப்படி அணிந்து சென்று பள்ளியறையில் தியானம் செய்தால் காதலன் உன்னையே சுற்றி வருவார் என்றார். நான் தரும் வசிய மையை காதலனின் தொப்புளில் தடவினால் உன் காலடியில் விழுந்து கிடப்பான் என்ற ஆசை வார்த்தை கூறினார்.   நான் அவர் கூறியபடி, கவர்ச்சி உடை அணிந்து நடந்து கொண்டேன். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு என்னை ஆபாச படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல், ரூ. 5 ஆயிரம் பணத்தையும் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் நடிகை லலிதா கூறியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் நடிகையிடம் விசாரணை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட ஜோதிடர் பற்றியும், அவர் இதற்கு முன்பு யாரிடமாவது இவ்வாறு நடந்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment