காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோழரை சேர்ந்தவர் குலாம்
நபிதர். இவரது மகள்கள் அரியா (வயது 18), அக்தர் (16).இவர்கள் வீட்டுக்குள் இரவு 10 மணியளவில் 3 தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் அரியா, அக்தர் இருவரையும் வீட்டை விட்டு வெளியே இழுத்து சென்றனர்.
அங்கிருந்த தர்கா அருகே அழைத்து சென்று துப்பாக்கியால் இருவரையும் சுட்டுக் கொன்றனர். இருவரின் பிணத்தையும் அங்கேயே போட்டு விட்டு தீவிரவாதிகள் தப்பி விட்டனர்.
அக்காள்-தங்கையை அவர்கள் கொன்றதற்கான காரணம் தெரியவில்லை. போலீசுக்கு தகவல் சொல்பவர்களாக இருக்கலாம் என கருதி கொன்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
3 தீவிரவாதிகளில் 2 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். உள்ளூர் தீவிரவாதிகள் 2 பேரும் வாசிம்கான், முசாபர் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் தலைக்கு போலீசார் ஏற்கனவே பரிசு அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment